Saturday, June 15, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 21/2013)


Posted: 19 May 2013 03:00 PM PDT
உங்கள் விஸ்வாசத்தை உறுதிபெறச் செய்யுங்கள்.ஸ்திரமாக்குங்கள்.மனம் திரியட்டும்.அது எனக்காகவே ஆகட்டும்.சிந்தனை செய்யுங்கள்,அது என்னைப்பற்றியதாகவே இருக்கட்டும்.என்னிடம் உங்கள் ஆர்வம் எவ்வளவு இருக்குமோ,என்அனுக்கிரகமும் அவ்வளவு இருக்கும்.பகீரதப்பிரியத்தனம் செய்யத் தேவையில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 20 May 2013 03:00 PM PDT
நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன்.நன்றாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் துக்கப்படுபவர்களாக ஆக வேண்டாம்.கிடைத்தவற்றில் திருப்தியடைந்து இருங்கள்.நான் ஒரு பக்கீர்.வீடு வாசல் இல்லாதவன்.லௌகீக தாக்கங்கள் இல்லாதவன்.ஒவ்வொன்றையும் விட்டு விட்டு ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பவன்.இருந்த போதிலும் மாயை அடிக்கடி என்னையும் பாதித்துக் கொண்டே இருக்கும்.நான் அதை மறந்தாலும் அது என்னை மறக்கவில்லை.பிரம்மா முதல் சிறு பிராணி வரை இந்த மாயையில் விழாதவர்கள் இல்லை.ஹரி நாமம் ஜபிப்பவர்கள் மட்டும் இந்த மாயை ஒன்றும் செய்யாது.அவர்கள் இருக்கும் இடத்தின் பக்கத்திலும் செல்லாது.ஹரி  நாம ஜபம் எப்பொழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டும்.ஆகையால்தான் நான் இறைவனின் நாமம் பற்றி அடிக்கடி சொல்லுகிறேன்.இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும்.ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும்.அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும்.ஸ்மரணை செய்ய வேண்டும்.அதுபோல் எப்போதுமே செய்து வரவேண்டும்.கலியுகத்தில் இறை நாமத்தைத் தவிர்த்து,தருணோபாயம் வேறொன்றில்லை.அது ஒன்றே அடைக்கலம்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 21 May 2013 03:00 PM PDT
சர்வ இந்திரியங்களும் பைத்தியம் பிடிக்கும்படி,பக்தி பாவத்துடன் இறைவனை ஆராதிக்க வேண்டும்.அவர் இதயம் கரையும்படி பூஜிக்க வேண்டும்.இப்படிச் செய்து வந்தால் விஷய வாசனைகளிலிருந்து இந்திரியங்கள் விலகியிருந்து மனம் சாந்தியடையும்.சாந்தமடைந்த மனம்,அந்தப் பரமனின் திருப்பாதங்களில் ஸ்திரமாக நிற்கும்.ஸ்தரமடைந்த மனம் என்னையே தரிசிக்கும்.சத்புருஷர்களின் தரிசனமாத்திரத்தில்,சகல பாவங்களும் நசிந்துவிடும்.தேகம்,இந்திரியங்கள் பரிசுத்தமடையும்.என்னிடமிருந்து வேறாகாத மனத்தில் புரச்சிந்தனைகள் தோன்றாது.துன்பங்கள் தலையெடுக்காது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Posted: 22 May 2013 03:00 PM PDT
நம்பிக்கையுடன் நான் கூறுவதை கேளுங்கள்.நான் உங்களுக்காகவே வந்துள்ளேன்.உங்கள் காரியத்தைத் தவிர,எனக்கென்று வேலைகள் ஏதும் இல்லை.கர்ம அனுசரணைகளும் இல்லை.இரவும்,பகலும் உங்களைப் பற்றியதே என் சிந்தனையெல்லாம்!உங்களைக் கடைத்தேற்றுவதோன்றே என் லட்சியம்.என் பக்கமாக பார்வையை திருப்புங்கள்.அமைதியான மனதுடையவராய் என் கதைகளைக் கேளுங்கள்.அப்படியாக வெற்றியடையுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 23 May 2013 03:00 PM PDT
குருவைத்தவிர வேறு ஒன்று இல்லை என்ற பாவனையை மனதில் இருத்திக்கொள்.என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு.என் பார்வையை உன்மேல் வைப்பேன்.என்னையே லட்சியமாகக் கொள்.உனக்கு நிச்சயம் சுபம் விளையும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பா


Posted: 24 May 2013 03:00 PM PDT
சாய்பாபாவின் கிருபையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரிதி  இருக்கட்டும். ஏனெனில்,அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
Posted: 25 May 2013 03:00 PM PDT
பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை.நம் தாயை எப்படி அணுகுவோம்?இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது.அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள்.அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று,முற்பிரவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார்.ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது?அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என் மனப்பூர்வமாக விரும்பட்டும்.உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது.அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது.அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர்,மேன்மேலும் பலனடைகின்றனர்.முதலில் ஒரு வித நன்றியுணர்வையும்,நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள்.பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள் ,படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து,பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும்,கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]படிக்கட்டும்.பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி[108 நாமாக்கள்]மிக்க சக்தி வாய்ந்த சாதனம்.ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள்,பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும்.ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார்.ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது,அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார்.பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும்.உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள்,விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள்.சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது.பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள்,அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.









ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 20/2013)


நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன். - ஷிர்டி சாய்பாபா
Posted: 14 May 2013 03:00 PM PDT
நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா          
Posted: 16 May 2013 03:00 PM PDT

என்னைச் சார்ந்திருப்பவர்களின் யோகச் ஷேமங்களிலேயே என் ஆனந்தம் இருக்கும்.இது உண்மை.இதமானவற்றைச் சொல்லவே நான் இருக்கிறேன்.கேட்டும் கேளாதவர் போல் இருப்பவரை எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது.காலத்தின் ஓட்டத்தால் அவ்வாறு நிகழ்ந்ததுஎன்று சமாதானப்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.நாமாக பின்பற்ற வேண்டிய  ஜாக்கிரதைகள் உள்ளன.சாத்தியமானவரை,சாமார்த்தியமாகத் தப்பித்துக் கொள்ளும் முயற்சியும் கூட செய்யவேண்டும்.புதை சேறு இருக்கிறதென்று தெரிந்தும் கூட,எப்படியிருக்குமோ பார்க்கலாம் என்று  இறங்குபவர்கள் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்.நான் உங்கள் பளுவைச் சுமப்பேன் என்பது வாஸ்தவமே.எப்போது சுமப்பேன்?எனது பேச்சை நீங்கள் கௌரவிக்கும்போது மட்டுமே.என்னைச் சரணடைந்த போது மட்டுமே பாரத்தைச் சுமப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 17 May 2013 04:13 PM PDT

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும்போது பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காகவே ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]

Posted: 18 May 2013 03:00 PM PDT
ஒரு குரு பெளர்ணமி தினம். என் குருவான உபாசினி மகராஜ் ஷிர்டியை விட்டு கரக்பூருக்கு போவதற்கு முன் அது. சாயி பாபா என்னிடம் பூஜை சாமான்களையும், நைவேத்தியத்தையும் எடுத்துச் சென்று மகராஜுக்கு பூஜை செய்யும் படி பணித்தார். பாபாவின் ஆணை எனக் கூறி மகராஜை நான் பூஜை செய்யத் தொடங்கினேன். மகராஜ் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அந்த தினத்திற்கு பிறகு நான் மகராஜை ஒரு போதும் பூஜை செய்யவில்லை. அவரிடம் என்னகுள்ளது ஒரு குருபந்துவினிடம் இருக்க வேண்டிய எண்ணமே. ஷிர்டி மக்கள் பலரைப் போல் நான் அவரிடம் வெறுப்பு காட்டவில்லை. சாயிபாபா அடிக்கடி சொல்வார்; "நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக்கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும்."  ஆனால் உபாசினி மகராஜிடம் என் மனோபாவத்தை அவரும் மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பஞ்சகன்யா நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களில் உதவும் நோக்கத்துடன் நான் சகோரிக்குச் சென்றேன். ஆனால், என் எண்ணம் அவருக்கு எதிராக இருக்குமெனக் கருதி, மனம் விட்டு தனியாக அவரிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. நான் திருபினேன்.

என்னிடமும் என் குடும்பத்திடமும் சாயிபாபா காட்டிய பிரிவு 1918-ல்  அவர் இறப்பதற்கு முன் மட்டுமின்றி பின்னரும் வெளியாயிற்று.

1918-
ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். "பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" என அவர் என்னிடம் உறுதி அளித்தார். (இதைச் சொல்லும்போது அந்த அம்மையாரின் கண்களில் நீர் பெருகியது) - சந்திர பாய். ஷிர்டி சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.