Thursday, January 3, 2013

INDIAN COW:SOME STATISTICS


INDIAN COW:SOME STATISTICS
[cow1.jpg]
பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.

பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.

கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.

பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.

பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.

பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.

பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.

பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.அதாவது,ஒரு பசுவை பராமரிக்க ஒரு மாதத்துக்கு ரூ.20,000/-செலவாகும் எனில்,அதே மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000/-சம்பாதிக்கமுடியும் மிக சுலபமாக!!!
இதுபற்றி சென்னையில் சேத்துப்பட்டுபகுதியில் கோசாலா என்ற அமைப்பினர் பயிற்சியளித்துவருகின்றனர்.

ஊருக்கு ஒரு கோசாலை அமைப்போம்;வருமானத்தோடு,புண்ணியத்தையும் சேர்ப்போம்.

Source :http://www.aanmigakkadal.com/2009/09/indian-cowsome-statistics.html

“தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்



பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்” – ஒரு விளக்கம்
1. பிறருக்கு நல்லது செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும், தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வது, மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உடலாலும், பணவசதியினாலும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கினாலேயும், சமுதாய சேவை செய்யும் உணர்வினை நமது இதயத்தில் வாழச் செய்யலாம். (-ம் பண வசதி குறைவாக உள்ளவர்கள், நாட்டிற்கு உண்மையாக சேவை செய்வதன் மூலம், பிறருக்கு சேவை செய்யலாம்; பண வசதி உள்ளவர்கள், தங்கள் செல்வத்தின் மூலம், இல்லாதவர்களுக்கு உதவலாம். செல்வாக்கு உள்ளவர்கள், தங்கள் செல்வாக்கினை, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைநிலையினை உயர்த்தப் பயன்படுத்தலாம்.)
2. மனிதன் தானாக, ஒரு புல்லின் இதழைக் கூட உருவாக்க இயலாது. நமக்கு வேண்டிய அன்றாட உணவினையும், உடைகளையும், அளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்போமேயானால், மிகப் பெரிய, செய்நன்றி மறந்த குற்றமிழைத்த உணர்வுடையவர்களாகக் கருதப்படுவோம்நாமுண்ணுவதில் மிகச் சிறப்பானதும், தேர்ந்தெடுக்கப்பட்டதையுமே அவனுக்கு (இறைவனுக்கு) நிவேதனமாக்க வேண்டும். (நிவேதனம் என்றால் நன்றியுடன் அறிவித்தல் எனப் பொருள்)
3. தன்னலமில்லாத அன்பு (பிரேமை) இல்லாத வாழ்க்கை வீண். அனைத்து மனித உயிர்கள்; பறவைகள் மற்றும் விலங்கினங்களிடத்தும் பிரேமை அல்லது தூய அன்பினை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. தரும சிந்தனைக்கு இடமில்லாத மனிதர்கள் பாடுபட்டு, சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் சொத்தானாலும்,, அவர்கள் மன நிம்மதி கெடும் வகையில் பொதுவாக அவனது வாரிசுகளால் உதாரித்தனமாக செலவழிக்கப்படும். இயல்பாகவே பிறருக்கு உதவுகிற நாட்டமுடைய பரோபகாரியின் குடும்பங்கள் எந்நாளும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்படிக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்.
5. பாராட்டத்தக்க வகையில் செயல் செய்திருக்கிற ஒரு மனிதன், அடுத்தவர்களின் பாராட்டுக்களை விரும்பிக் கேட்டாலோ அல்லது தானாக தனது செயல்களைக் குறித்து தற்பெருமை கொண்டாலோ அவனது நற்செயல்களினால் உண்டாகும் மதிப்பினை இழப்பான்.
6. நடந்து முடிந்த செயல்களைக் குறித்து வேதனையடைவதனால் எந்தவித நண்மையும் உண்டாகாது. நல்லதையும் தீயதையும் வேறுபடுத்தி உணரக் கற்றுக் கொண்டோமானால், அது மறுபடியும் தீமையினால் நம் நிலை தடுமாறாது நம்மைப் பாதுகாத்திருக்கும்.
7. நாம் நமது வாழ்நாளின் நாட்களை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். நமது சொந்த விருப்பங்களுக்கல்லாது, பிறரின் நல்வாழ்விற்குத் துணையாக இருக்கும் செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
8. அன்றாட வாழ்வில் நமக்காக விதிக்கப்பட்டிருக்கிற அனைத்துக் கடமைகளையும் (கர்மானுஷ்டானங்களை) இறைவனிடத்து முழு விசுவாசமுடன் நம்பிக்கையுடையவராக, மனம் ஒருமுகப்பட்டு (பக்தி சிரத்தையுடன்) செய்ய வேண்டும்.
9. அவரவர் தங்களது நித்திய கடமைகளை (கர்மானுஷ்டானங்களை) தவறாது செய்வதன் மூலமே, அவர்களின் (வாழ்வின்) குறிக்கோள்களை அடைகிறார்கள்.
10. நமது அனைத்துத் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும், தெளிவான வழியுரைப்பது, ஞானம் (பெறுவது) ஒன்றேயாகும்!

தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்”

பரமாச்சார்ய மஹா ஸ்வாமிகள்
ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி அருளிய
தசோபதேசம்” - “பத்துக் கட்டளைகள்

1. நம் வாழ்க்கை முறையில் நடை உடை பாவனைகளில் அவரவர் குல ஆச்சாரத்திற்கேற்ப நடந்து கொள்வது.
2. அவரவர் குல ஆச்சாரப்படி செய்ய வேண்டிய, நித்திய விதிமுறைகளை (கர்மானுஷ்டானங்களை) முறை தவறாது செய்தல் வேண்டும். அது குறித்த விழிப்புணர்வினை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும். நமது நித்திய விதிமுறைகள் (கர்மானுஷ்டானங்கள்) மற்றும் நமது வைதீகக் காரியங்களின் (உபநயனம், திருமணம், நீத்தார் கடன் போன்ற செயல்களின்) பொருள் உணரச் செய்தல்)
3. பசு மாடுகளைக் காப்பது. (கோ சம்ரக்க்ஷணம்கோசாலை அமைத்தல், கோபூஜை செய்தல் முதலானவை).
4. வேதம் ஓதுவது மற்றும் ஓதுவதற்கு உதவுவது. (வேத அத்யயனம், வேத அத்யாபனம்). ஆடவர்களுக்கு வேதம்/ருத்ரம் முதலியன கற்பித்தல், குழந்தைகளுக்கும் மகளிருக்கும் சமுஸ்கிருத தமிழ் ஸ்லோக வகுப்புக்களை ஏற்படுத்துவது.
5. பிடி அரிசித் திட்டம்
6. புறக்கணிக்கப்பட்ட சிதிலமடைந்த இறை வழிபாட்டுத்தலங்களை சரி செய்து பராமரிப்பது (-ம் பகவத் கைங்கர்யம், உழவாரப்படை திருப்பணி, சிதிலம் அடைந்த கோயில்களைப் சரி செய்வது போன்றவை). அவ்வாலயங்களில் இறை வழிபாடுகள் முறையாக நடக்க வழிவகைகள் செய்வது. நமது சிவ விஷ்ணு ஆலையத்திலேயே நித்தியமும் செய்யப்படும் ஆலையப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
7. சாதி மத பேதமின்றி அநாதைப் பிணங்களுக்கான இறுதிக் கடன்களைச் செய்வது ( அநாதப் பிரேத ஸ்மஸ்காரங்கள்) உத்ரக்கிரையை நடத்த தக்க வசதிகளை உண்டாக்குவது.
8. எளிமையான முறையில், முறையான வைதீகக் காரியங்களை விட்டுக் கொடுக்காமல், சமஷ்டி உபநயனங்கள் மற்றும் திருமணங்களை நடத்துவது. நடத்த உதவுவது (ஜாதகப் பரிவர்த்தனை, ஐம்பொன் தாலி மற்றும் கூறைப் புடவை வாங்கித்தருவது முதலானவை)
9. இசை மூலம் இறையுணர்வை வளர்த்தல். இலவச இசை வகுப்புக்களை நடத்துவது.
10. அரசாங்க விதிமுறைகளை மீறாமல், பெண்களுக்குரிய திருமண வயது எனக் குறிப்பிட்ட வயதிலாவது திருமணம் செய்விப்பது. வரதட்சிணையை நேராகவோ, மறைமுகமாகவோ வாங்குவது/கொடுப்பது இவற்றைத் தவிர்த்தல்.(ஆதாரம்: தெய்வத்தின் குரல்)

Tuesday, January 1, 2013

வட இந்தியாவில் இருந்து பசுக்களை கொண்டு வருவது என்?


          வட இந்தியாவில் கிடைக்கும் நாட்டு பசுக்களே சாஸ்த்திரத்தில் உரைத்த தெய்வீகமான பசு வகையாகும். பாற்கடல் அமிர்தம் கடையும் நேரம் வெளியான நந்தா,சுபத்ரா,சுரபி,சுசீலா,பகுளா என்ற 5 வகை தெய்வீக தன்மையுடைய புனித பசுக்களே இப்புவி மக்களின் நன்மைக்காக தோன்றியவை.தேவர்கள் இந்த 5 வகை பசுக்களையும் ஜமதாக்னி, பரத்வாஜர்,வசிஷ்டர்,அசிதா,கெளதமா போன்ற முனிவர்களுக்கு வழங்கினர் இந்த வகை பசுக்கள் மக்களின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்யும் தன்மையுடையது என்வே நாம் பசுக்களை காமதேனு என்று அழைக்கிறோம் ( பவிஷ்யபுராணம் உத்ரபர்வா 69 அத்தியாயம்த்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணா யுதிஷ்ட்ரரிடம் உரைக்கிறார் மேலும் பசுக்களில் நான், சுரபி என்று பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்
எவனொருவன் பசுவையும் எள்ளையும் நியம விதிகளின் படி தகுதியான அந்தணருக்கு தானமாக வழங்குகிறானோ அவன் வினைகளின் பலனான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை
பால் பசுவை தானம் செய்யும் ஒருவன் எல்லாவிதமான ஆபத்திலிருந்தும் பாவ விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றான் (காவோ உபநிஷத்)
”நமோ ப்ராமண்ய தேவாய கோ-பிராமன்ய கிதாய ச                        ஜெகதிதாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நமஹ “
Source :யாசகர் விபூஷண கிருஷ்ணதாஸ் Gorakshyam Trust

தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் ?


நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதிக்கும் வகையில் தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
வலியுறுத்தியுள்ளார்.
 பா.ஜ. ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. குஜராத்தில் பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ராஜஸ்தானில் பா.ஜ. ஆட்சி செய்த போது பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பசுவை கொல்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க மத்திய பிரதேசத்தில் பசுவதை தடுப்பு சட்டம் வகை செய்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பசு வதையை தடை செய்ய மத்திய அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
காந்தி நகரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் நேற்று மோடி பேசினார். அப்போது, பசுக்களை பாதுகாக்க தேசிய பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ரயில்களில் பசு இறைச்சியை ஏற்றி செல்ல தடை விதிக்க வேண்டும் என்றார்.
 Source :http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=7261:2012-02-07-02-32-23&catid=99:indian-news&Itemid=462
Cattle trafficking must be avoided. The effects of cattle trafficking is evident from the video. Let us join hands in preventing this inhuman activity.