Wednesday, February 12, 2014

இந்த உலகம் சுபிக்ஷமாக இருக்க-தர்மானுஷ்டானம் ஸ்ரேயஸ்ஸைக் கொடுக்கக் கூடுயது


    வேத ரக்ஷணம்
    இந்த உலகம் சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்று சொன்னால் தர்மானுஷ்டானம் நடக்கவேண்டும். தர்மம் ஒன்றுதான் எல்லோருக்கும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுக்கக் கூடியது. தர்மானுஷ்டானம்தான் உலகத்திற்கு சுபிக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது. எங்கே தர்மம் சரியாக நடக்கிறதில்லையோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. ஜனங்களுக்கு ÷க்ஷமம் இருக்காது. எங்கே தர்மம் சரியாக நடக்குமோ அங்கே ஜனங்களுக்கு ÷க்ஷமம் இருக்கும். அந்த பிரதேசத்திற்கு சுபிக்ஷம். அதனாலே தர்மம்தான் நமக்கு நம்முடைய ஜீவிதத்திலே அத்யந்த அபேøக்ஷ உடையது. இந்த உலகத்தில் மகான் என்று யாரைச் சொல்லலாம் என்று கேட்டால் பணக்காரனையோ, ரொம்ப படித்தவனையோ பெரிய பதவியிலே இருக்கிறவனையோ மகான் என்று சொல்ல முடியாது. எவன் தர்மத்தை ஆசரணம் செய்கிறானோ அவனைத்தான் நாம் மகான் என்று சொல்லலாம். எவன் சாஸ்த்ரோக்தமான தர்மானுஷ்டானம் செய்கிறானோ அவனைத்தான் உலகத்தில் மகான் என்று சொல்லுவார்கள் என்று பகவத் பாதாள் சொல்கிறார். அதனால் நாம் வேறு எதனாலேயும் பெரிய மனிதன் ஆகமுடியாது. தர்மாசரணம் செய்துதான் நாம் நம்முடைய வாழ்க்கையை சார்த்தகமாக்கிக் கொள்ள வேண்டும். தர்மத்தைப் பற்றி நாம் வேதத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.

    வேதோகிலதர்மமூலம்
    அகில: வேத: தர்ம மூலம்
    தர்மத்திற்கு மூலமானது வேதம்.

    வேதம் எது செய் என்று சொல்லி இருக்கிறதோ அது தர்மம். வேதம் எது செய்யாதே என்று சொல்லியிருக்கிறதோ அது அதர்மம். இந்த தர்மா தர்மங்களின் விஷயத்தில் வேதத்திற்குத்தான் பிராமாண்யம். அதனால் நமக்கு எல்லோருக்கும் ÷க்ஷமம் வேண்டும். நம் நாடு சுபிக்ஷமாக இருக்க வேண்டும். நமக்கு எல்லோருக்கும் இகத்திலேயும், பரத்திலேயும் சவுகர்யம் வேண்டும் என்கிற ஆசை இருந்தால் நாம் கட்டாயம் தர்மத்தை ஆசரிக்கவேண்டும். அந்த தர்மத்தை போதிக்கக்கூடிய வேதத்தைக் காப்பாற்ற வேண்டும். வேதத்தினுடைய பிராமாண்யத்தைக் காப்பாற்றுவதற்குத்தான் பகவான் பட்டபாதர் ரூபத்தில் அவதாரம் பண்ணினார். அன்றைக்கு பவுத்தர்கள் எல்லோரும் இந்த வேதத்தைப் பற்றி ஜனங்களுக்கு பிராமாண்ய புத்தி இல்லாமல் பண்ணிவிட்டார்கள். வேதம் என்று சொன்னால் எல்லோருக்கும் ஒரு திரஸ்கார (வெறுப்பு) பாவனை வந்துவிட்டது அந்தக் காலத்தில். வேதம் என்று சொன்னால் போடா வேறு வேலையில்லை என்று சொல்லக்கூடிய நிலைமை வந்து விட்டது. அந்தச் சமயத்தில் பகவத்பாதாள் அவதரித்து அந்த பவுத்தர்கள் எல்லோரையும் வாதத்தில் தோற்கடித்து துரத்தி வேதத்தினுடைய பிராமாண்யத்தைக் காப்பாற்றினார். ராஜாவுடைய ஆஸ்தானத்தில் பவுத்தர்களோடு வாதம் செய்தார் பட்டபாதர். கடைசியிலே ஒரு பந்தயம் ராஜா வைத்தார். இந்த மலைமேலே ஏறி எவன் குதிப்பானோ அப்படி குதித்தாலும் அவனுக்கு ஒரு காயமும் ஆகாதோ அவன் சொல்லுவதுதான் பிரமாணம் என்று நான் ஏற்றுக் கொள்வேன் என்று பவுத்தர்களுக்கும் சொன்னார். பட்டபாதருக்கும் சொன்னார். பவுத்தர்கள் ஒருவனோடு ஒருவன் பார்த்துக் கொண்டு அது எப்படியடா? மலைமேல் ஏறிக் குதித்தால் பிராணன் போய்விடுமே. அது எப்படி முடியும் என்றனர். பட்டபாதர் உடனே வேஷ்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு மலை ஏறிவிட்டார். மலை ஏறிவிட்டு ஒரேயடியாகக் குதித்துவிட்டார்.

    யதி வேதா: பிரமாணம்
    ஸ்யுர்பூயாத்காசிந்தமே க்ஷதி:

    வேதம் பிரமாணம் ஆனால் எனக்கு ஒரு காயம்கூட ஆகாது. என்று மனதில் நினைத்துக் கொண்டு மலைமேலிருந்து குதித்தார். ஈஸ்வரனின் கிருபையால் ஒரு காயமும் ஆகாவில்லை. அங்கேதான் வித்யாரண்யர் சொல்லியிருக்கிறார். ஏன் அவருக்கு அப்படி ஆகிவிட்டது. அப்படி மலை மேலிருந்து குதித்து ஒரு காயமும் ஏற்படவில்லை. அவரை யார் அந்தச் சமயத்தில் காப்பாற்றினார்.

    யார் அந்த வேத மாதாவையே ஸர்வார்த்தமாக நம்பி இருந்தார்களோ அவர்களை அந்த வேத மாதாவே காப்பாற்றுவாள். அந்த வேத மாதாதான் தன் குழந்தையை கையில் தூக்கிக் கொண்ட மாதிரி பட்டபாதரை தூக்கிக் கொண்டாள். அப்படி வேதத்தை வேதபிராமாண்யத்தை பட்டபாதர் காப்பாற்றியதினால் இன்றைக்கு நாம் வேதம் படிக்கிறோம். இல்லாவிடில் அந்த மாதிரி மகான்களெல்லாம் அந்த கார்யத்தை பண்ணாவிட்டால் இன்றைக்கு வேதம் எங்கே? வேதம் படிக்கிறவன் எங்கே? வைதீகம் தர்மம் எங்கே? அப்பேர்ப்பட்ட மகான்களெல்லாம் இந்த வேதத்தை, தர்மத்தை தன்னுடைய பிராணனைக் கூடப் பணயமாக வைத்துக் காப்பாற்றியதால் அந்த வேதத்திற்கு இருக்கிற மதிப்பை நாம் தெரிந்து கொண்டு அந்த வேதரக்ஷணம் நம்முடைய கர்தவ்யம் (கடமை) என்கிற பாவத்தில் இருக்க வேண்டும்.  50,60 வருஷங்களுக்கு முன்னால் 120 வேத பண்டிதர்கள் இருந்த இந்த இடத்தில் இந்தக் கிராமத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால் எவ்வளவு வருத்தம் ஆகிறது. எப்பேர்ப்பட்ட கிராமத்தில் இப்பேர்ப்பட்ட நிலைமை இன்று வந்திருக்கிறது. கேவலம் 60 வருஷத்திற்குள் எவ்வளவு மாற்றம்? எவ்வளவு வருத்தம்? இப்பேர்ப்பட்ட பரிஸ்திதியை நாம் இதே மாதிரி போவதற்கு விடக்கூடாது. திரும்பி இந்த ஊருக்கு அந்த பழைய ஸ்திதி வரவேண்டும். அந்த வேதபண்டிதர்கள் வெளியூருக்கு போகக்கூடிய சந்தர்ப்பம் வரக்கூடாது. இந்த ஊரிலேயே ஆட்கள் இருக்கிறார்கள். இந்த ஊரிலேயே அவர்கள் 120பேரை வைத்து நாம் அதிருத்ரம் பண்ண வேண்டும் என்கிற நிலைமை இங்கு வர வேண்டும். அப்பேர்ப்பட்ட ஓர் ஆசையோடு ஒரு சைஜன்யத்தோடு இந்த ஊரில் இருக்கிற மகாஜனங்கள் இந்த ஒரு பெரிய கார்யத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். மீதி எதற்கெல்லாமோ செலவு பண்ணிக்கொண்டு இருப்பார்கள். இந்தப் பணக்காரர்களுடைய ஐஸ்வர்யம் எங்கெல்லாம் போகிறது? பெரிய பெரிய வீடு கட்டுவது அந்த வீட்டில் நிறைய அலங்காரம் பண்ணுவது பெரிய பெரிய சொகுசான சாதனங்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வது இவற்றில்தாம் பணக்கார்களுடைய பணம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தமாதிரி வேதரக்ஷணம் போன்றவற்றிற்குப் பணத்தைச் செலவழிக்க மனம் வருவதில்லை.

    அந்தக் காலத்தில் வீடுகளுக்கு ஜன்னல், கதவு போன்றவற்றை மரவேலை செய்பவன் பெரிய பெரிய மரங்களை அறுத்துத் தயாரிப்பான். வீடு பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும்படி பணக்காரர்கள் செய்து கொள்வார்களே தவிர டாம்பீகமாக அநாவசியமாகச் செலவழிக்க மாட்டார்கள். இக் காலத்திலோ மார்பிள், டைல்ஸ் இப்படி என்னென்னமோ புதிது புதிதாகக் கண்டுபிடித்து வீட்டிற்கு தேவைக்கு மேல் அலங்காரப்படுத்தி செலவழிக்கிறார்கள். இந்த காலத்தில் இந்த மாதிரி வேதரக்ஷணம் என்பதற்கு செலவு பண்ண வேண்டும் என்கிற பாவம் ஆயிரத்தில், பத்தாயிரத்தில் லட்சத்தில் ஒருவனுக்குத்தான் வரும். அப்பேர்ப்பட்ட ஒரு பாவம் இந்த ஊரில் இருக்கக்கூடிய மகாஜனங்களுக்கு வந்திருக்கிறது என்பது ரொம்ப ஸ்லாக்கியமான விஷயம். உங்களுக்கு இருக்கக்கூடிய இந்த ஸம்ஸ்காரம் ரொம்ப விசேஷமானது. நாம் ஒரு ஸத்ஸங்கல்பம் பண்ணினோமானால் அதற்கு சஹாயம் எங்கேயிருந்தெல்லாமோ வரும் நாம் நினைக்கவே மாட்டோம். ஆனால் இந்த வேதத்தை ரக்ஷணம் பண்ண வேண்டும் என்ற பவித்ரமான சங்கல்பம் யார் மூலமாகவோ சஹாயத்துக்கு வந்து அது நிறைவேற்றப்படுகிறது.

    பகவான் நமக்கு அனுக்ரஹம் பண்ணவேண்டும் என்று சொன்னால் பகவான் நம்மைக் காப்பாற்றுவான், அனுக்ரஹம் பண்ணுவான் என்றால் என்ன அர்த்தம்? நம் எதிரில் வரமாட்டான் அவன். எப்படி பசுக்களை மேய்க்கிறவன் அவற்றின் பின்னாலேயே போய் காப்பாற்றிக் கொண்டிருக்கிறானோ அப்படி நம்மைப் பகவான் காப்பாற்றுவானா? பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் என்ன அர்த்தம்? அதற்கு முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். பசுக்களை மேய்க்கிற மாதிரி பகவான் நம்மை மேய்ப்பதில்லை. என்ன பண்ணுவான் என்று கேட்டால் யார் நம்மை காப்பாற்றுவான் என்று நினைக்கிறானோ அவன் உள்ளத்திற்குள் புகுந்து அவனுக்கு ஒரு சரியான ப்ரேரணையைக் கொடுப்பான். ஒரு சரியான ப்ரேரணை, ஒரு தோற்றம், நமக்கு ஒரு நல்ல கார்யத்தை நடத்த ஒரு தோற்றம் மனதிலே அந்த அபிப்ராயம் வந்தால் பிறகு அது கார்யத்துக்கு வரும். ஏனெனில் மனிதனுடைய ஸ்வபாவம் முதலில் மனதில் அந்த பாவம் வரவேண்டும். அந்த பாவம் வந்தால் அது பின்பு வாக்கில் வரும். பிற்பாடு காரியத்திற்கு வரும். மனதிலே அந்த பாவம் வரவேண்டும். அப்பேர்ப்பட்ட மஹா கார்யத்தை செய்ய வேண்டும் அதில் தான் பங்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாவத்தை மனதிலே தோன்றி அதை பகவான் உண்டாக்கினான். அந்த ப்ரேரணையினாலே இந்த ஸத்கார்யத்திலே அவர் ஈடுபட்டு இருக்கிறார். இது ரொம்ப ஸ்லாக்கியமான கார்யம். இந்த மஹத் கார்யமான இந்த வேத பாடசாலை மூலமாக வேத சாஸ்த்ர வித்வான்கள் தயாராகட்டும். அதனால் நம் வேத சாஸ்த்ர பரம்பரை நன்றாக பிரகாசிக்கட்டும் என்று நான் ஆசீர்வாதம் செய்கிறேன். மேல்மங்கலத்தில் இருக்கக்கூடிய சிருங்கேரியில் பக்தியானது நேற்று, இன்றைக்கு வந்ததன்று. எத்தனையோ பரம்பரையாக வந்து இருக்கிறது. அப்பேர்ப்பட்ட உங்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிபூர்ணமாக ஆசீர்வாதம் செய்கிறேன்
    .நன்றி :temple.dinamalar


    Thursday, February 6, 2014

    ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்


    ரத ஸப்தமி: எருக்க இலையின் மகத்துவம்
    சூரிய தேவன் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கிச் சரியாகத் திருப்பி ஓட்ட ஆரம்பிக்கும் நாளை “ரத ஸப்தமி’ என்பார்கள். இந்நாளில் சூரியனை வழிபட காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வார்கள். ஏன்?
    மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார்.
    இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.
    காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. “”ஸ்வாமி… நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?” என்று வினவினார்.
    “நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?” என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார். உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவகிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன.
    இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவகிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது.
    ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவகிரகங்கள்… தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டணை உண்டே. அதனால் “”காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை” என்றார் பிரம்மா.
    அந்த தண்டனையைக் கேட்டு அலறிய நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.
    பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.
    “திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்றார் அகத்தியர். நவகிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, “”அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்” என்றார் அவர்.
    அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவகிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.
    ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    “ஸப்த ஸப்த ப்ரியே தேவி
    ஸப்த லோக ப்ரதீயிகே
    ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன
    மம பாபம் வ்யபோஹய”
    என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ “திவாக்ராய நம: இதமர்க்யம்” என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்.
    பீஷ்மத் தர்ப்பண நாள்: ரதஸப்தமியை ஒட்டி வரும் ஒரு விசேஷ நாள் பீஷ்மத் தர்ப்பண நாள். நல்ல விஷய ஞானம் உள்ள பெரியோர்கள் இன்றும் பீஷ்மருக்கு அன்று அர்க்ய பூஜை செய்வார்கள். அர்க்யம் என்றால் என்னவோ ஏதோ என்று குழம்ப வேண்டாம்.
    நேராக நிமிர்ந்து இரு கைகளிலும் நீரை ஏந்தி நின்று, “பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி, பீஷ்மம் தர்ப்பயாமி (3 முறை)” என்று ஓதியபடி இணைந்த கரங்களைச் சற்றுத் தாழ்த்திச் சாய்த்து விரல் நுணிகளின் வழியே பூமியில், நீரை விடுதல்தான் அர்க்யம் என்பது. கிருஷ்ண பரமாத்மாவிடம் பீஷ்மர் சகலத்தையும் ஒப்புவித்து சரணாகதி அடைந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சி.
    பீஷ்மர் எவரும் எளிதில் பெற முடியாத “இச்சா மிருத்யு’ என்ற வரத்தைப் பெற்றவர். இது, தான் விருப்பப்படும்போது மட்டுமே உடலை விட்டு உயிரைப் பிரித்துக்கொள்ளும் அபூர்வ யோக சக்தி. அதாவது தான் விரும்பும்போது தன் உடலில் இருந்து பஞ்ச பூத சக்திகளைப் பிரித்துப் பூஜ்யம் என்ற ஒன்றுமேயில்லாத பிரபஞ்ச சூனியத்தால் ஐக்கியமாவது. இது மரணங்களில் எந்த வகையிலும் பேரிட்டுச் சொல்ல முடியாத அபூர்வமான ஆன்மிக சக்தியால் உடலை விட்டு உயிரைக் களைவது. இத்தகைய பெரும் பேறு பெற்றவர்களைத்தான் “பூஜ்ய ஸ்ரீ’ என்று அடைமொழியிட்டு அழைப்பர்.
    பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடி உத்தராயண புண்ய கால வருகைக்காக உயிரைப் பிடித்தபடி கிடக்கிறார்.” இந்த நிலையில்கூட பகவானின் விஸ்வரூப தரிசனம் இன்னும் கிட்டவில்லையே, அதற்கான தகுதி நம்மிடம் இல்லையோ” என்றெல்லாம் மனம் குழம்பி கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ண பரமாத்மாவுக்கு பீஷ்மர் நிலை புரியாதா என்ன?
    அம்புப் படுக்கையைச் சுற்றி நின்றிருந்த அகஸ்தியருடன் உரையாடுவது போல பேசிக்கொண்டிருக்கிறார். அந்த நிலையிலும் பீஷ்மரிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்கும் ஆசை கிருஷ்ணனுக்கு உதித்தது.
    பீஷ்மருக்கு அனுக்கிரகம் புரிந்து ஆட்கொள்வது என்பது எப்போதோ முடிவான விஷயம். இருந்தாலும் கிருஷ்ணன் அந்தக் கடைசி நேரத்திலும் ஒரு சின்ன நாடகமாடினார். அகஸ்தியரிடம் கண்களை காட்ட அகஸ்தியர் பீஷ்மரிடம், “”நீங்கள் அனைத்தையும் கண்ண பரமாத்மாவிடம் அர்ப்பணித்து விட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது. அதுதான் அந்த “இச்சா மிருத்யு’ என்ற வரம். பகவானிடம் அர்ப்பணிக்கப்படாமல் இருக்கிறதே” என்கிறார்.
    பீஷ்மர் இதைக் கேட்டு விக்கித்துப் போய் விடுகிறார். ஆமாம்… அது ஒன்று இன்னும் அவரிடம் இருக்கிறதே…அதை பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமோ, ஞானமோ, எதுவுமே தன்னிடம் இல்லையே என்று கிருஷ்ணனிடம் கதறுகிறார்.
    அதை எப்படி அர்ப்பணிப்பது என்பது அகஸ்திய மாமுனிகளுக்கு நன்கு தெரியும் என்று கிருஷ்ணர் சொல்ல, பீஷ்மர் அகஸ்தியரை வேண்டினார்.
    அவர் கூறியபடி பிரம்மாவைத் துதித்து கிருஷ்ணருக்குப் பாத பூஜை செய்தார். அவர் பாதங்களைத் தாங்கியிருந்த மரப்பீடத்தை நெஞ்சில் ஒரு தாமரை பூவை வைத்து அதன் மீது நிறுத்தினார். பீடத்தை வைத்து அகஸ்தியர் கூறிய மந்திரங்களைப் பய பக்தியுடன் ஓதுகிறார் பீஷ்மர். பீஷ்மரின் அன்னையான கங்கா மாதாவும் அப்போது எழுந்தருளி ஆகாச கங்கை நீரை புரோட்சிக்கிறார். அப்போது, “இச்சா மிருத்யு’ என்ற வரத்தின் ஒளி பீஷ்மரின் இதயத்திலிருந்து வெளியே கிளம்பி கிருஷ்ண பரமாத்மாவையும் கங்கா மாதாவையும் வலம் வந்து பிரபஞ்ச வெளியில் மறைகிறது. சகலத்தையும் கிருஷ்ணனுக்கே அர்ப்பணித்த பீஷ்மரின் இந்த பரிபூரண சரணாகதி நினைவாக பீஷ்மருக்கு அர்க்யம் கொடுக்கும் வழக்கம் வந்தது.
    எவரும், மது, மாது, புகை போன்ற தீய பழக்கங்களில் சிக்காமல் நல்ல ஒழுக்கத்துடன் வாழ இந்த பீஷ்ம தர்ப்ணா அர்க்ய பூஜை தோன்றாத் துணையாய், ஒரு காப்பு அரணாய் செயல்படும் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.