Saturday, April 20, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 16/2013)



Posted: 14 Apr 2013 03:00 PM PDT

ஒரு உண்மையான பக்தரின் கோரிக்கைகள் பாபாவினால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நிராகரிக்கப்பட்டதில்லை அசையாத தளராத நம்பிக்கையும், பொறுமையும் கொண்டு பாபாவின் பதிலுக்காக காத்திருத்தல் வேண்டும்.

Posted: 15 Apr 2013 03:00 PM PDT
எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். 
Posted: 16 Apr 2013 03:00 PM PDT
பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-
ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"
எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.  
வளம் பெருகும்
Posted: 17 Apr 2013 03:00 PM PDT
பாலக்ருஷ்ண ராமச்சந்திர கைரீகர், வயது 70, ஜூலை 27, 1936.

நான் முதன் முதலில் சாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு பைத்தியக்காரன் என்று. அது சுமார் 35 வருடங்களுக்கு முன்பு. ஆனால் எல்லோருமே அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும் ஷிர்டியிலுள்ள எனது உறவினர் குல்கர்னி முலம் அவரை காணச் சென்றேன். நான் ஒரு பரம்பரை கிராம அதிகாரி. 1916-ம் ஆண்டில் அரசாங்கம் எங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டது. அந்தக் காலத்தில் மக்கள் சித்தலே, ஜல்காம், ராம்பூர், நாத்யட்ல்சா,வாடி, பிம்பல்வாடி வழியாக ஷிர்டி செல்வார்கள். அந்த சாலை உபயோகிக்கப்படாததால் இப்போது அது காணப்படவில்லை.

பாபா விளக்குகளில் நீர் ஊற்றி எரிய வைத்ததை நான் பார்த்திருக்கிறேன். 1908-ம் ஆண்டில் ஒரு சமயம் நான் பாபாவிடம் சென்றபோது மசூதியில் ஒரு தம்பிடி (பைசா) நாணயத்தின் மீது காலை வைத்துவிட்டேன். நான் அதை கையில் எடுத்து. "இதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தங்களுடைய நாணயம்" எனச் சொல்லி பாபாவிடம் கொடுத்தேன். பாபா அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து, "அது சரி. இந்த நாணயத்தை உன் வீட்டிற்கு கொண்டு போ. மற்ற விக்ரகங்களுடன் இதையும் உன் பூஜையில் வை. உனக்கு வளம் பெருகும்" எனக் கூறினார். நான் அதை எடுத்துச் சென்று பூஜித்து வந்தேன். மூன்று ஆண்டுகள், அதாவது 1911-ம் ஆண்டு வரை, நான் வளமாயிருந்தேன். அதற்கு முன்பு, இரவு சாப்பாட்டுக்கு எனக்கு அரிசி கூட கிடைக்காது. ஆனால் இந்த பூஜை தொடங்கிய பின், என் மனைவி தங்க வளையல்கள் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு என் உத்தியோகத்தில் வருமானம் கிடைத்தது. பின்னர் பயணம் மேற்கொண்டு அசுத்தி ஏற்பட்ட சமயம் என் பூஜையையும், பாராயணம் செய்யும் புத்தகத்தையும், தம்படி (நாணயத்தை) ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தேன்; சில நாட்களுக்கு பின்னர் நாணயம் காணாமற்போயிருந்தது. அது முதல் (1911) என்னை துரதிருஷ்டம் துரத்துகிறது. நாணயம் தொலைந்து 6 மாதங்களில் என் மனைவி இறந்தாள். 1916-ல் என் வேலை பறிபோயிற்று. 1917-18-ல் என் அன்னை இறந்தாள். இப்போது உணவை நான் யாசித்துப் பெறுகிறேன். ஓவ்வொரு ராம நவமிக்கும் ஷீரடிக்கு சென்று வருகிறேன். - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள்.
Posted: 18 Apr 2013 03:00 PM PDT
நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலமும் கவலைபடாதீர்கள். உங்கள் நலன் கொண்ட விஷயங்களைபற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள். - ஷிர்டி சாய்பாபா    
Posted: 19 Apr 2013 03:00 PM PDT
உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கவனமாகக் கேள்! இதுவரை மட்டுமல்ல, இன்னமும் நீ அனுபவிக்கிற, எதிர் கொள்கிற ஒவ்வொரு செயலும் உன் முன் ஜென்ம கர்மாவின் படிதான் நடக்கிறது. இதை மாற்ற இயலாது. பரமேஸ்வரனாலேயே மாற்ற முடியாத ஒன்றை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும்.

கர்மாவை மாற்ற முடியாத கடவுளை எதற்காக கும்பிடவேண்டும் என நீ நினைக்கலாம். கர்மாவின் தீவிரத்தை குறைத்து, அதை நல்ல வழியில் மாற்ற வழி காட்டுவதற்கு குரு வழிபாடு வேண்டும்.  - ஸ்ரீ சாயியின் குரல்.
Posted: 20 Apr 2013 03:00 PM PDT
பொறுமையை யார் கையாள்கிறாரோ, அவருடன் தாம் இருப்பதாக பாபா எப்போதும் சொல்லி வந்தார். ஆனால் உங்களால் இயன்றவரை எதிர்மறையான சூழ்நிலைகளிலிருந்து விலகி நிற்பது நன்று. அவரை வேண்டி நின்றால், உள்ளிருந்த வண்ணமே அவர் நல்வழி காட்டுவார். பயனற்ற விவாதங்களிலும், சச்சரவுகளிலும் வீணாக்காமல் உங்கள் பொன்னான நேரத்தை சேமித்து வைத்து பாபாவின் சேவைக்கு என ஒதுக்குங்கள். - சத்பதி  





No comments:

Post a Comment