Saturday, November 16, 2013

பாபா புத்திரபாக்கியம் அருளுகிறார்


Posted: 29 Aug 2013 03:00 PM PDT

பாபா புத்திரபாக்கியம் அருளுகிறார் 
ஹர்தாவைச் சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள்,ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால்,குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார்.அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்;ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்குச் செல்லவில்லை.1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் சீரடிக்கு பாபாவிடம் வந்தார்.

 
பாபா:என்ன!திமிறு  ஏறி விட்டதா உனக்கு?உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது  ஆண்  குழந்தை?நான் இந்த உடலை(தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு  ஒரு ஆண் மகவு அளித்தேன்.

தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட,பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரபேறு அருளினார். 

No comments:

Post a Comment