Saturday, June 29, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 25/2013)

 
Posted: 16 Jun 2013 03:00 PM PDT

உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு.அவ்வாறான மனிதன்,தனது தேஹத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுப்பற்றிக் கவலைப்படமாட்டான்.அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.




Posted: 17 Jun 2013 03:00 PM PDT

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்;என் பக்தர்களை நான் துக்கப்பட விடுவதில்லை.சிர்டீயில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது.
நீர் தடங்கல்களின்  கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்;துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்;ஆனால்,யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ,அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்.இவ்விடத்திலிருக்கும் பக்கிர் மஹா தயாளன்;உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான்.அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்"-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


Posted: 19 Jun 2013 03:00 PM PDT

ஒருவன் தனது சுமைகளை என் மீது இறக்கிவிட்டு,என்னையே நினைத்திருப்பானாகில் நான் அவனுடைய எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன்.அவனுடைய எல்லா காரியங்களையும் நானே முன் நின்று நடத்தி வைக்கிறேன்.-ஷிர்டி சாய்பாபா

Posted: 21 Jun 2013 03:00 PM PDT

யாரைப் பற்றியும் அவன் எனக்கு எதிராளி எனக் கூறாதே.யார் யாருடைய
விரோதி?எவரிடமும் மனக்கசப்பை ஏற்படுத்திக் கொள்ளாதே.எல்லோரும் ஒன்றுதான்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.





No comments:

Post a Comment