Saturday, August 17, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 33/2013)


 
Posted: 11 Aug 2013 03:00 PM PDT
எனது பக்தனை நான் மறக்கமாட்டேன்.அவன் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்,நான் எப்போதும் அவனை நினைத்திருப்பேன்.அவன் இல்லாமல் ஒரு துளி கூட நான் உண்ணமாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 12 Aug 2013 03:00 PM PDT
பக்தர்: பாபா,என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?
பாபா: உலகில் ஆயிரக் கணக்கானவர்கள் உள்ளனர்.அவர்கள் எல்லோரையும் வரச் சொல்கிறேனா?உம்மை மட்டும் தருவிக்க ஏதாவது
விசேஷ காரணங்கள் இருக்க வேண்டாமா?

பக்தர்: இருக்கலாம்.ஆனால் எதையும் என்னால் காண முடியவில்லை.

பாபா: நீயும் நானும் பல ஜன்மங்களில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்திருக்கிறோம்.உமக்கு அது தெரியாது;ஆனால் நான் அறிவேன்.ஆகையால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது இங்கே {ஷிர்டி}வந்து போய்க் கொண்டிரும்.
இலவசம்
Posted: 13 Aug 2013 03:00 PM PDT
பிறருடைய உழைப்பை (பொருள் உட்பட)இலவசமாக ஒரு போதும் பெறாதே.இது உன் வாழ்க்கையில் ஒரு விதியாக இருக்க வேண்டும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 14 Aug 2013 03:00 PM PDT
நீ என்னை சார்ந்தவன்,என்னை மட்டுமே சார்ந்தவன்.ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கரையேற்றும் பொறுப்பை நான் தான் வகிக்க வேண்டும்.என்னை விட்டால் உனக்கு வேறு எவர் உளர்?-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 15 Aug 2013 03:00 PM PDT
வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.  
Posted: 16 Aug 2013 03:00 PM PDT
மிக உயர்ந்த செல்வம் ஏழ்மையே;ஒரு பிரபுவின் அந்தஸ்தைக் காட்டிலும் அது உயர்ந்தது.ஏழைகளின் தோழன் இறைவன்.பகீரே உண்மையான பேரரசர். துறவுத் தன்மை அழிவதில்லை.ஆனால் சாம்ராஜ்யம் விரைவில் மறைகிறது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
Posted: 17 Aug 2013 03:00 PM PDT

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும், விசுவாசத்திற்க்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்களுடன் திடமாக நிற்கிறேன்.-
ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment