Wednesday, February 20, 2013

நாட்டின் செல்வங்கள்

நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
பண்டைய இந்திய பாரம்பரியம் கால் நடைகளைகுறிப்பாக பசுக்களையும்,காளைகளையும்மையப்படுத்தியே சுட்டிக்காட்டப்படுகிறதுஆநிரைகள் மட்டுமே அவர்கள் சொத்துபள்ளி கல்லூரி பருவங்களில் தமிழ் கவிதைகள் பல மறந்து போனாலும் அதில் காணப்படும் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளும் ,பெண்களும் நம்மால் மறக்க முடியாத பாத்திரங்கள் ஆனார்கள்.ஆரியர்கள் கைபர்போலன் கணவாய் வழியாக கடந்து வந்ததாக கூறப்படும் கருத்தோட்டத்தில் அவர்கள் மட்டும் தனியாக வரவில்லைகூட்டமாக கால்நடைகளையும் அழைத்து வந்தனர்பசுக்கள்காளைகள்எருமைகள் மட்டுமல்லாது கழுதைகள் மற்றும் அரேபிய குதிரைகள் என பட்டியல் நீளுகிறதுஇப்பட்டியல் ஆங்கிலேயர்கள் கால் பதித்ததில் துவங்கி வெண்மைப்புரட்சியின் கவர்ச்சி அலையில் அழியத் துவங்கியது.
இந்தியாவின் பாரம்பரிய சொத்துக்களான நாட்டு பசுக்கள் இப்போது எங்கே உள்ளனஎப்படி அடையாளம் காண்பதுயார் கொள்ளை அடித்தனர் போன்ற பாமர கேள்விகளில் துவங்கி வளர்ப்புபாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் என அனைத்து திசைகளிலும் தகவல்களை தரும் ஜோஷி ,விஜ்டாண்டியா மற்றும் நிர் சர்க்கார் போன்றோரை மறக்க முடியாதுஅவர்களை வாசித்த பின் கனத்த இதயமும்குற்ற உணர்வுமே நமக்கு மிஞ்சும்என் குருநாதரும்இயற்கை வேளாண் விஞ்ஞானியுமான திருஆர்.எஸ்நாராயணன் ஒரு கூட்டத்திற்காக காமாட்சிபுரம் வந்திருந்தார்சின்னமனூர்கூடலூர்வேப்பம்பட்டி,காமாட்சிபுரம் பகுதிகளில் காணப்பட்ட சித்து மாடுகள் கண்டு அவர் வியந்தார்.ஏனெனில் இவ்வகையானவை அழிந்துபோனவை என அரசுக் குறிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்மந்தையாக வாழும் இவை மேய்ச்சலின் மூலம் தங்கள் உணவை நிறைவு செய்யும்மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் இவை குறுகிய உடலமைப்பும்நீண்ட கால்களும் கொண்டவைசாணம் அதிக உரச்சத்து கொண்டதுஎனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இரவு பொழுதுகளில் "கிடைசாத்துகின்றனர்.அதனால் கிடைமாடுகள் என்றே இவற்றை அழைக்கிறார்கள்வயல் வெளிகளுக்கு இவற்றின் சாணமே போதுமானதுஉழவுக்கு முன் அல்லது முறைகள் கிடை சாத்தினால் கிடைக்கும் உர அளவை டி..பி ,யூரியா கூட எட்ட முடியாது என வேளாண் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார்.
மேய்ச்சல் நிலம் தேடி மாடுகள் மந்தையாக செல்லும் காட்சி அற்புதமானது.நெடி மனதை கவரக்கூடியது. 80கள் வரை நீடித்த இவ்வகையான நிகழ்வுகள் தற்போது புழக்கத்தில் இல்லாமலேயே போய்விட்டனஇன்று மேய்ச்சல் நிலமும் இல்லைமேய்பவரும் இல்லைநாட்டு பசுக்களும் அனாவசியமாகிப் போய் விட்டனரியல் எஸ்டேட் கொள்ளையர்களின் பார்வையில் வளம் தரும் வயல் வெளிகளே "அவசியமாஎன கேள்விக்கு உட்படுத்தபடும் போது பசுக்களை பற்றி கேட்கவே வேண்டாம்வனத்துறையும் போதாக் குறைக்கு தலைமுறை சார்ந்த மேய்ச்சல் குடிகளுக்கும் நிரந்தர தடை விதித்து விட்டனர்.பாலுக்கென்றே வளர்க்கப்பட்ட நெல்லூர்தார்பார்க்கர்காங்கேயம்காங்கிரஜ்...என நம் பாரம்பரிய இனங்கள் அருகிப்போய் ஜெர்சியும்பிரீஷியனும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளால் புகுத்தப்பட்டனதினமும் "வாளி நிறைய பால் கறக்கலாம்என்று ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்த சீமை ரகங்களின் உடம்பெல்லாம் வியாதிபண்டுகம் பார்த்தே நொந்து போனான் விவசாயிசீமைப்புல் ,கியூபா புல்நேப்பியர் புல்யூரியா கலந்த வைக்கோல் என செயற்கையாக தருவிக்கப்பட்ட உணவே அளிக்க வேண்டும்இதில் நகைச்சுவை என்னவென்றால்இப்புற்களின் விதை கிலோ 60 ரூபாய்விதை நெல்லின் விலையோ வெறும் 6ரூபாய்நஞ்சையே உணவாக உட்கொள்ளும் இவைகளின் பாலும் நஞ்சாக இருப்பது இயல்பு தானேவெள்ளை புரட்சியின் கறுப்பு சுவடுகள் இங்கிருந்து தான் துவங்கின.
தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆய்வுப்படி கெடால் ஹியூக் (Catal huyuk) என்ற துருக்கி நாடே அடிப்படை இனங்களின் தாயகமாக கருதப்படுகிறதுஅடிப்படை இனங்கள் என கருதப்படும் (1) திமில் இல்லாத நீண்ட கொம்பு (Bos taurus), (2)திமில் இல்லாத குட்டை கொம்பு மற்றும் (3) திமில் புடைத்தது (Bos indicus)போன்றவை இங்கிருந்தே வந்தவைஐரோப்பிய இனங்களில் காணப்படும் முன்னோர்களும் இவ்வினங்களில் காணப்படும் சகோதர வழி பந்தங்களே. "செபுஎன அழைக்கப்படும் பெருத்த திமில் கொண்ட காளை இனம் 5000ஆண்டுகளாக இந்திய உபகண்டத்தில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வினத்தில் இருந்தே தோன்றியுள்ளன தற்போது வரை இந்திய பாகிஸ்தான் தேசத்தில் எஞ்சி இருக்கும் நாட்டு இனங்களின் வாரிசுகள்செபு இன பசுக்கள் ஆப்பிரிக்காதென்வட அமெரிக்காஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு கப்பல் முலம் அனுப்பப்படுகின்றன. 16ம் நூற்றாண்டில் இருந்தே இவ்வகையான இறக்குமதி நடைமுறையில் இருந்து வருகிறது.
குறிப்பாக ஓங்கோல்கிர் மற்றும் காங்கிரஜ் போன்றவை பிரேசிலுக்கும்சிவப்பு சிந்திகாங்கேயம் மற்றும் காகிவால் போன்றவை ஈக்வடார் நாடுகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளனஇந்தியாவிலிருந்து அனுப்பப் பட்ட நாட்டு மாடுகளின் தூய சந்ததிகள் அமெரிக்காவில் இன்றும் காப்பாற்றப்படுகின்றனகுறிப்பாக காங்கிரஜ் (குஜராத்)ஓங்கோல் (ஆந்திரா)கிர் மற்றும் கிருஷ்ணா (ஹரியாணா)ஆகியவை புளோரிடா மற்றும் அட்லாண்டா பகுதிகளில் பெயர் பெற்றவை.இவைகளை பிராமணாஸ் (Brahmanas) என அழைக்கிறார்கள் .வேத காலத்து பிராமணர்கள் திமில் பருத்த செபு இன மாடுகளின் இறைச்சியை உண்டதாக வரலாறு உண்டு ஆகவே தான் யக்ஞ வல்கியர் "மாட்டிறைச்சியை உடலின் சதை வளர்க்க உண்கிறேன்என்றார்நாம் கைவிட்ட இப்பழக்கத்தை அமெரிக்கர்கள் கைவிடவில்லை போலும் !
1950 ல் கிருஷ்ணாராவ் என்பவர் கால்நடை துறை அமைச்சராக இருந்தார்.அந்த சமயம் டி.எம்.எஸ் என அழைக்கப்படும் (DELHI MILK SCHEME) துவங்கப்பட்டதுஅப்போதைய உயர் அதிகாரிகள் ஜெர்சி மற்றும் பிரீஷியன் போன்ற ஐரோப்பிய இனங்களை இறக்குமதி செய்தால் தான் திட்டம் வெற்றிப் பெறும் என்றனர்நம்மிடம் உள்ள தார்பார்கர், சாகிவால் மற்றும் சிந்தி போன்ற நாட்டுமாடுகள் இத்தேவையை பூர்த்தி செய்யும் போது ஐரோப்பி இனங்கள் தேவையில்லை என பதில் குறிப்பு எழுதினார் கிருஷ்ணாராவ்விளைவாக அவர் பதவி பறிபோனதுபிளிட்ஸ் இதழ் அவர் பழிவாங்கப்பட்டதாய் கூறியது.அப்போதை ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது உண்மை நிலை அறிந்து அவரை மீண்டும் பதவியில் அமர்த்தினார்அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வரை எந்த அன்னிய மாடுகளையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.காங்கிரஜ் என்ற மாட்டின் பெயரே மருவி "காங்கிரஸ்வந்ததாய் ஒரு கருத்து உண்டுகாந்தி பிறந்த இடத்திற்கு அருகில் தான் இம்மாடுகளின் தோற்ற மையம்கூட்டம் கூடும் இடம், கலப்பு என்ற அர்த்தம் தொனிக்க உபயோகப்படும் இச்சொல் ஒரு தேசிய கட்சியின் பெயராக உருமாற்றம் அடைந்து சீரழிந்து விட்டது. 1952 முதல் நான்கு பொது தேர்தல்களிலும்"மாட்டு பொட்டிக்கு ஓட்டுப்போடுங்கஎன்றே ஓட்டுக்கேட்டார்கள்இன்று சூட்கேசாக கைமாற்றம் அடைவது பரிணாம வளர்ச்சி !


அறிவியல் பயின்ற வேளாண் அதிகாரிகளும்கால்நடை வல்லுனர்களும் கலப்பினம் மூலமே மிக அதிக பயன் பெற முடியும் என்ற தவறான நம்பிக்கை கொண்டு தங்களை நாடிவரும் விவசாயிகளை மூளைச் சலவை செய்கிறார்கள்அவ்வாறு கலப்பினம் தான் தேவை என்றால் கால்நடைகளில் ஓங்கோல்சிந்தி மற்றும் தார்பார்க்கர் போன்ற இந்திய இனங்களுடன் தமிழ் மாநிலத்தில் உள்ள நாட்டு மாடுகளை சேர விடலாமேஅதற்காக ஜெர்ஸி மற்றும் பிரீஷியன் தேவையில்லை. "நம் நாட்டின் மாடுகள் நமது தேவையை விட குறைவாக பால் கொடுப்பது முற்றிலும் நமது தவறினால் தான்." என்ற காந்திஜியின் வரி நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்ட திப்பு சுல்தான் போர் முனைக்கு தனது ஆயுதங்களை கர்நாடக மாநில மாடுகளில் ஒன்றான ஹல்லிகர் மூலம் கொண்டு சென்றான்அவைகளின் சுறுசுறுப்பையும் இழுவைத்திறனையும் கண்ட எதிர் படை தளபதியான வெல்லஸ்லி பிரபு "இம்மாடுகளை போன்று100ஜோடிகள் நம்மிடம் இருந்திருந்தால் நெப்போலியனை எதிர்த்து போரிட்ட போது எளிதில் வெற்றி பெற்றிருப்போம்என்றாராம்இந்தியாவில் சுமை தூக்கஇழுக்க என 6.39 கோடி கால்நடைகள் பயன்பாட்டில் உள்ளனஇது 2007ல் எடுக்கப்பட்ட ஆய்வுஇவற்றில் 5.23 கோடி காளைகளும்61 லட்சம் ஆண் எருமைகளும்25 லட்சம் குதிரைகள்கோவேரி கழுதைகள்ஒட்டகங்கள் மற்றும் யாக் எருமைகள் என பலவும் கைகோர்த்து உயர் சக்தி ஆற்றலை மிச்சம் செய்கின்றனஉண்மையில்இவற்றின் அதிக பட்ச பயன்பாடு இறைச்சிகாக அவை உண்ணப்படுவது தான்!
கால்நடை வளர்ப்பு பொதுவாக பால் வளத்தை குறிவைத்தே பிரதானப்படுத்தப்படுகிறதுஇது தவறுஅவைகளின் கழிவுஇழுவைத்திறன் மற்றும் மாமிசம் போன்ற பயன்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.அரசின் உதவியோடு வெளிநாட்டு விந்துகளை நம் மாடுகளுக்குள் செலுத்தி,அவைகளின் உண்மையான இனம் அழிய நாமே வழி வகுக்கிறோம்இந்திய பொலி காளைகளின் வளர்ப்பு அதனால் புறக்கணிக்கப்படுகிறதுகாளை மாடுகளின் ஆற்றல் இன்றும் பஞ்சாப் ,ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளினால் உணரப்பட்டுள்ளதுஇங்குள்ள முரண்நகை என்னவெனில் அதிக டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் இம்மாநிலங்களில் தான் தயாரிக்கப்பட்டு தமிழகத்திற்கு சப்ளை செய்யப்படுகின்றனவிதைப்பு எந்திரம்,மண்கட்டிகளை சமன்படுத்தும் எந்திரம்ஆழ உழுது களையை புரட்டும் எந்திரம்கரும்புச் சாறு பிழியும் எந்திரம் என அம்மாநில விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொண்டு பயன் பெறும் வகையில் எந்திரங்களை வடிவமைத்துள்ளனர்அதைப்போன்று ஏன் நாமும் வடிவமைத்து நம் கால்நடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கூடாதுஇதற்குண்டான விடையை வேளாண் பல்கலை கழகங்கள்தாம் கூற வேண்டும்.
சீமை மாடுகள் குறைந்த காலத்திற்கு அதிக பாலை தரலாம்ஆனால் நம் நாட்டு ரக மாடுகளைப் போல் சக்தியும் திறனும் படைத்தவை அல்ல அவை.காங்கேயம் மற்றும் ஹல்லிகர் காளைகளின் சக்தி (BULL POWER) அரேபிய குதிரைகளின் குதிரை சக்திக்கு (HORSE POWER) நிகரானது என்ற மேலை நாட்டு அறிஞர் குறிப்பை நான் தஞ்சை சரஸ்வதி மகாலில் கண்டேன்உழவு மாடுகளின் பராமரிப்பு செலவிற்கும் பால் தரும் நாட்டு ரக வளர்ப்பிற்கும் அரசு மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்மானியம் வழங்குவதில் இவ்வகைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மிக அவசியம். "அப்போது தான் நம் நாட்டு வளர்ப்பு ரகங்கள் கீழ்மை அடையாது".

நன்றிஎஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா/

No comments:

Post a Comment