Tuesday, January 29, 2013

பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை


பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை

 முகலாய சாம்ராஜ்யத்தில் முஸ்லிம் மன்னர்கள் - பாபர் முதல் அகமத்ஷா ஆட்சி காலம் வரை பசுவதை முற்றிலும் தடைசெய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின் பற்றுவதில் பெயர்போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசு வதையை ஆதரிக்ககூடாது என கடுமையாக வலியுருத்தினார் . மைசூர்
சுல்தான்களாகிய ஹைதரும், திப்புவும்கூட பசுக்களை கொல்வதை தடைசெய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளைவெட்டும் கடும் தண்டனையும் விதித்தார்கள்!

ராபர்ட்கிளைவ்: இந்திய விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள்தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன் முதலில் பசுவதை கூடங்களை அமைத்தான் .

காந்தி: பசுவதையை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வர்ப்புருத்தினார் .

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல்நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என கூறிய நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்தசொன்னால் பதவி விலகுவேன் என மிரட்டி பசுவதைக்கு ஆதரவளித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடுமூலம் கொன்று அடக்கு முறையை கையாண்டார்.

மரபணுக்கள் மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியா விற்குள் திணிக்கப்பட்டன.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலைகள் என வலியுறுத்தி வருகிறார். விலை மதிப்பில்லா பஞ்ச கவ்யம் மற்றும் இயற்கை உரங்களைதரும், மரபு பசுக்கள் நமதுசொத்து, அவற்றை காக்கவேண்டிய அவசியம் குறித்து வலியுருத்தி வருகிறார்.

பணத்துக்காக இன்று மர பின பசுக்கள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன. பசு வதை என்பது வெளிநாட்டின் சூழ்ச்சி என்பதை யாரும் அறியாமல் அதற்கு ஆன்மீகசாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என கூறிக்கொண்டு நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள். மனிதர்களைவிட மாடுகள் அதிகமாக இருந்த பங்களாதேசில் மாடுகள்_அழிந்து இன்று குழந்தை பால்பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சிமருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர் நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...

Source :!http://tamilthamarai.com/political-science/3450-2012-11-19-05-31-54.html






No comments:

Post a Comment