Monday, January 21, 2013

யாகம் செய்யும்போது பசுவின் பயன்பாடு


மிகப்பெரிய ராஜசூய யாகம். புத்திர காமதேனு யாகம் செய்யும் போது முதலில் பசுவை முன்னிறுத்தி கோமாதா பூஜையை செய்த பிறகு தான் யாக வேள்விக்கான வேலைகளை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு யாகத்தீ எரிய விடும் போது, அக்னி தேவன் வந்து விசேஷ பாகங்களைப் பெற்றுக்கொள்கிறான்.
 
மகாவிஷ்ணு அதற்கு பலம் சேர்க்கிறார். பிரம்மா ஆசார்யனாக அமர்ந்து அக்னி குண்டத்தை கவனிக்கிறார்.பிரம்மாதி தேவர்களும் இந்திரனும் தங்களது படைகளோடு எழுந்தருள்கிறார்கள். கலைவாணியும், மகாலட்சுமியும் கலசம் மற்றும் தீப வடிவத்தில் அங்கே அமர்ந்து விடுகிறார்கள். நான்கு வேதங்களும் அந்தணர் வடிவில் வந்து வேத மந்திரங்களை முழங்கிட தேவர்களில் ஒரு சிலர் (பந்துக்களாக) சொந்தங்களாக வந்து நிற்கிறார்கள்.
 
இவர்கள் அனைவரையும் யாக காலங்களின் போது ஒரே சமயத்தில் அழைத்து வரும் வல்லமை படைத்ததாக பசு விளங்குவதால், அதன் பயன்பாடு யாக காலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பால், தயிர், நெய், வெண்ணெய், கோமயம், கோ ஜலம் ஆகிய பொருட்கள் யாகத்தீயில் இடும்போது அக்னி தேவன் மகிழ்ச்சி அடைகிறார்.
 
பசுவை வணங்கி யாகம் செய்வதால் உலகம் சிறப்படைகிறது. பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள பாவம் நீங்கும். அகால துர்மரணங்கள், விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம்  அணுகாது. கொடிய நோய்க்கிருமிகள் இல்லத்தை விட்டுப்போகும். காலத்தில் மழை பெய்து நாட்டில் நலம் விளையும்.
 
கோமாதாவை தினம் வழிபடுவது எப்படி?
 
கோமாதாவை வேத முறைப்படி வழிபட்டால் அரசனுக்கு ஒப்பான யோக பாக்யங்களோடு இந்த உலகில் வாழ முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. கிரகலட்சனம்- கோ சம்ரட்சணம் என்று சொல்வழக்கே உண்டு.
 
திருமகள் வடிவாகவும், தெய்வங்களை உடலில் வைத்துக்கொண்டும் உயிரினமாகிய பசுவை சுத்தமான இடத்தில் நிற்க வைத்து மஞ்சளும் பச்சகல்பூரமும் கலந்த நீரால் குளிப்பாட்டி பச்சை அல்லது மஞ்சள் வஸ்திரம் உடுத்தி கொம்புகளில் மஞ்சள் பூசி உடலெங்கும் பொட்டுகளை வைத்து கதம்ப மாலை சாற்றி முதலில் விநாயகர் வணக்கம் சாணத்தில் செய்ய வேண்டும்.
 
பிறகு ஸ்ரீசுக்த மந்திரங்களைக்கூறி அல்லது கேசட்டில் ஒலிக்க விட்டு லட்சுமி அஷ்டோத்தித அர்ச்சணையும் சொல்லி வழிபடல் வேண்டும். பிறகு சர்க்கரை சாதம் அல்லது அரிசி வெல்லம் கலந்த கலவையும் அகத்திக்கீரையும் கொடுக்க வேண்டும். மகாலட்சுமி, கிரகலட்சுமிக்குரிய துதிகளைக்கூறி தூபதீப நிவேதனங்களைச் செய்து மூன்று முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும்.
எங்கள் தாயே கோமாதா ஏற்றம் தந்து காப்பவனே.
திங்கள் தோறும் கும்பிட்டால் தேனாய் நலமே தந்திடுவாய்.
தொழுவந் தன்னில உலவிடுளாய் தோற்றம் எளிய பாவையே
விழுப்பொருளாய் வந்த தாயே வினையும் களைந்து நலம் சேர்க்க!.

Source :http://www.maalaimalar.com/2013/01/16155418/yagam-use-of-cow.html

No comments:

Post a Comment