Tuesday, January 22, 2013

இசையை ரசிக்கும் பசுக்கள் அதிகம் பால் கறக்கும்

புனேவில் உள்ள ஒரு பால் பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு கர்நாடக இசை பாடல்கள் ஒலிபரப்ப‌ப்படுகிறது. புனேவில் அமைந்திருக்கும் பால் பண்ணை ஒன்றில் மாடுகளுக்கு மென்மையான மற்றும் கர்நாடக இசை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.


நாள் முழுவதும் பண்ணையில் இருக்கும் பசுக்கள் இந்த இனிய பாடல்களை கேட்பதால் அமைதியான சூழலில் நல்ல ஆரோக்கியத்துடனும் மனநலத்துடனும் இருப்பதாக பால் பண்ணையின் நிறுவனரான பாரக் ஷா தெரிவித்துள்ளார். இந்த புதிய வகை இசை சிகிச்சையின் மூலம் பண்ணையின் பால் உற்பத்தி வழக்கத்தை விட 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இம்மாதிரியான இசை சிகிச்சை வெளிநாடுகளில் அதிகமாக காணப்பட்டாலும்இ இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.



Source: http://www.puthiyaulakam.com/2012/12/cow-hear-music.html



No comments:

Post a Comment