Tuesday, January 29, 2013

பசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் ! (?)


மெல்போர்ன்: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி., எய்ட்சை ,பசுவின் பால் அருந்தினால் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மார்டிட் கிராம்ஸ்கி இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் சோதனையின்படி, கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை (ஆன்டிஜென்ஸ்) உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற பின் தந்த முதல் பாலை (கொலாஸ்டிரம்) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யை தடுக்கக்கூடிய ஏராளமான எதிர் உயிரிகள் (ஆன்டிபாடீஸ்) இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
தற்போது விஞ்ஞானிகள் இந்த முறை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இம்முறை சாத்தியப்படும் பட்சத்தில் இவ்வகை பால், கிரீமாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சோதனை குறித்து மார்டிட் கிராம்ஸ்கி கூறுகையில், எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில், எதிர் உயிரிகள் நிறைந்த புரோட்டீன் (ஆன்டிபாடீஸ்) ஒட்டிக்கொள்ளும். இதனால் எச்.ஐ.வி., வைரசால், மனித செல்களில் ஒட்டிக்கொள்ள இயலாது. இதன் மூலம் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., பரவுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில் பூட்டில் சாவியைப் போல எதிர் உயிரி புரோட்டீன் இணைவதால், எச்.ஐ.வி., வைரசால் வேறு எந்த செல்லுடன் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய சூழலில், ஆணுறைகளை அடுத்து மிகவும் எளிமையாக எச்.ஐ.வி.,யை தடுக்கும் வழியாக இது அமையும் என கிராம்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் ஒரு கவலை தரத்தக்க விஷயம் என்னவென்றால் இம்முறை செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது தா

Source :http://www.dinamalar.com/

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2012,

நன்றி

No comments:

Post a Comment