Thursday, March 21, 2013

பங்குனி உத்திர நாயகன்!


பங்குனி உத்திர நாயகன்!

கும்பமுனி அகத்தியர் சாஸ்தா பக்தர் என்பதற்கு சபரிமலையின் மூலாதாரக் கோயிலாக கருதப்படும் சொரிமுத்து ஐயனார் கோயில் (அம்பா சமுத்திரம் தாலுக்கா, நெல்லை மாவட்டம்) சாட்சியாக விளங்குகிறது. கி.மு. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ""பிங்கள நிகண்டு (தமிழ் அகராதி), ஹரிஹரபுத்திரன், ஐயன், ஆர்யன், பூரணைக் கேள்வன், புட்கலை மணாளன், அறந்தைக் காப்போன், சாகவாகனன், கோழி கொடியோன், சாத்தன், வெள்ளையானை வாகனன், காரி (குதிரை வாகனமுடையோன்), செண்டாயுதன்,யோகி,கடல் நிற வண்ணன் எனப் பல பெயர்களை சாஸ்தாவிற்கு கூறுகிறது.
சாஸ்தா வழிபாடு துருக்கி, கம்போடியா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் இருந்ததாக ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில் பங்குனி உத்திரத்தினை ஒட்டி, வரும் 31ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மறைமலைநகர் பாலாஜி திருமண மண்டபத்தில் முதன்முறையாக சம்பிரதாய சாஸ்தா ஜெயந்தி நடக்கிறது.
தகவலுக்கு: 98402 58639
நன்றி:. ஆர். மகாலிங்கம்/ தினமணி-வெள்ளிமணி
First Published : 21 March 2013 03:51 PM IST


No comments:

Post a Comment