Monday, March 11, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 9/2013)



Posted: 24 Feb 2013 02:00 PM PST
சிருஷ்டியின் எந்த மூலைக்கு  வேண்டுமானாலும் செல்லுங்கள்.கிட்டவோ, எட்டவோ எழுகடல் தாண்டியோ செல்லுங்கள்.எனது பக்தர்களின்மேல் உண்டான பிரேமை எல்லை அறியாதது.ஆகவே,கவலையின்றி எங்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்திற்கு உங்களுக்கு முன்பாகவே சென்று நான் அங்கு இருப்பேன்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 25 Feb 2013 02:00 PM PST
வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன்,மனம்,வாக்கு,உடல்,செல்வம்,அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.பக்தர் நெருங்கிய பக்தர் யார்.
Posted: 26 Feb 2013 02:00 PM PST
அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். செய்வது யாதாயினும், எங்கு இருப்பினும், எப்போதும் இதை நினைவில் வை. உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
Posted: 27 Feb 2013 02:00 PM PST
, குருநாதா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்தப் பொருட்களைச் சுகம் என்று என்மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நீரே நிறைவேற்ற வேண்டும். உமது கருணையினால் இவ்வாறு செய்துவிடும், எனது மனதை அடக்கிவிடும்.  எனது எல்லாக் குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். பக்தியின்மை, சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக. - ஸ்தவன மஞ்சரி-யில்,  ஸ்ரீ தாஸ்கணு மகாராஜ், 1840 வருடம்.
Posted: 28 Feb 2013 02:00 PM PST
"செல்வம் என்றுமே நிரந்தரமில்லை.சரீரமோ ஒரு நீர்க்குமிழி.மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக".-ஷீரடி சாய்பாபா.
Posted: 01 Mar 2013 02:00 PM PST
 "நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே.இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜென்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக.மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி,சத்சரித்திரம் பாராயணம் செய்யும்.
மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சத்சரித்திரத்தை காதால் கேளும்;
அல்லது நீரே பாராயணம் செய்யும்.முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.இறைவன் சந்தோஷமடைந்து  உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான்.மாயையும் மோகமும் விலகும்.அத்தியந்தமான சுகம் கிடைக்கும்"-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 02 Mar 2013 02:00 PM PST
உன்னுடைய மனதில் என்னென்ன தோன்றுகின்றனவோ  அண்ணன்ன விருப்பங்களைப் பூர்த்திபண்ணுபவன்  நானே.உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடியவன் நானே.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா. 

No comments:

Post a Comment